For Daily Alerts
Just In
போலி பாஸ்போர்ட், விசா- மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பெண், 2 பேர் கைது
சென்னை:
போலி பாஸ்போர்ட், போலி விசாக்களுடன் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற பெண் உள்ளிட்ட 3 பேர்சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிடிபட்டனர்.
ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தைச் சேர்ந்த சித்ரா ஆதிலட்சுமி (31) என்பவர் கொழும்பு செல்லும் ஏர் லங்காவிமானத்தில் ஏற முயன்றார். அங்கிருந்து இவர் குவைத் செல்ல இருந்தார். ஆனால், அவரிடம் இருந்தது போலிவிசா என்று தெரிய வந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.அதே போல சென்னையையடுத்த திருவள்ளூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (45) என்பவர் இதே விமானத்தில்,கொழும்பு வழியாக லண்டன் செல்ல முயன்றார். அவரிடமும் இருந்தது போலி விசா என்பதால் கைதுசெய்யப்பட்டார்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சூர்யமூர்த்தி (44) என்பவர் ஏர் இந்தியா விமானம் மூலம் கோலாலம்பூரில் இருந்துசென்னை வந்திறங்கினார். அவரிடம் இருந்தது போலி பாஸ்போர்ட் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரும்கைது செய்யப்பட்டார்.
மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Story first published: Thursday, July 6, 2006, 5:30 [IST]