For Daily Alerts
Just In
சென்னை தொழிலதிபருக்கு டென்மார்க் பட்டம்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், தென்னிந்தியாவுக்கான ஹாலந்து(டென்மார்க்) நாட்டின் கெளரவத் தூதருமான என்.சங்கருக்கு, டென்மார்க் நாட்டின்உயரிய விருதான டென்னேபிரோக் நைட்ஹுட் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை டென்மார்க் ராணி வெளியிட்டுள்ளார். டென்மார்க் நாட்டின்கெளரவத் தூதராக சீரிய முறையில் செயலாற்றியதைப் பாராட்டி சங்கருக்கு இந்தப்பட்டம் வழங்கப்படுகிறது.கடந்த 18 ஆண்டுகளாக டென்மார்க் கெளரவத் தூதராக சங்கர் செயல்பட்டு வருகிறார்.இப்பட்டத்தைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையும் சங்கருக்குக்கிடைத்துள்ளது.
வழக்கமாக டென்மார்க் நாட்டவருக்கு மட்டுமே இந்தப் பட்டம் வழங்கப்படும். முதல்முறையாக வெளிநாட்டைச் சேர்ந்த சங்கருக்கு இப்பட்டம் வழங்கப்படுவதாகசென்னையில் உள்ள டென்மார்க் துணைத் தூதரகத்தில் உதவித் தூதர் பிரபாகர் ராவ்கூறியுள்ளார்.
Comments
Story first published: Thursday, July 6, 2006, 5:30 [IST]