நளினி-முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்
வேலூர்:
வேலூர் சிறைச் சாலையில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ள நளினி மற்றும் முருகனை சென்னை மத்திய சிறை அதிகாரிகள்சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணட தண்டனை விதிக்கப்பட்ட முருகனும், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி நளினியும் வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது மகள் அரித்ரா இலங்கையில் உள்ளார்.தமிழகத்தில் மேல் படிப்பு படிப்பதற்காக அரித்ரா தமிழகம் வர விரும்புகிறார்.இதற்கான கல்வி விசா கோரி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில்விண்ணப்பித்துள்ளார். ஆனால் விசா வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முருகனும், நளினியும் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த 10 நாட்களாக இருவரும்உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுடன் வேலூர் சிறை அதிகாரிகள்பலமுறை பேச்சு நடத்தியும் போராட்டத்தை இருவரும் கைவிடாமல் உள்ளனர்.
இந் நிலையில், சென்னை மத்திய சிறையிலிருந்து அதிகாரிகள் குழு வேலூர் சென்றுஇருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. போராட்டததைக் கைவிடுமாறு அவர்கள்கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை ஏற்க முருகனும், நளினியும் மறுத்து விட்டனர்.இருவரும் மிகவும் பலவீனமாக இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications