மணிரத்தினம் வீட்டில் குண்டு வீச்சு: 4 குற்றவாளிகளும் விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திரைப்பட இயக்குனர் மணிரத்தினத்தின் வீட்டில் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மணிரத்தினத்தின் வீடு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ளது. இந்த வீட்டில் கடந்த 1995ம்ஆண்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக அல் உம்மா அமைப்பைச் சேர்ந்தஏர்வாடி காசிம், ஷாகுல் ஹமீது, ஜாகிர் உசேன் உள்ளிட்ட 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.அவர்கள் மீது பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைவிசாரித்த நீதிபதி தியாகராஜ மூர்த்தி தீர்ப்பை வழங்கினார்.
இதில் நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுக்கும் உரிய ஆதாரங்களை அரசுத் தரப்புஅளிக்க தவறி விட்டதால் நான்கு பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கிலிருந்து நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டாலும் கூடகோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள்மீது இருப்பதால் தொடர்ந்து சிறையிலேயேதான் இருப்பார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications