தமிழகத்தில் ஆங்காங்கே கரண்ட் கட்!
சென்னை:
என்.எல்.சி. ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலியாக, சென்னை உள்பட தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலாக மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால்நிலைமை மோசமாகும்.
என்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசுமுடிவு செய்திருப்பதை எதிர்த்து என்.எல்.சி. ஊழியர்கள் 36,000க்கும் மேற்பட்டோர்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இதனால் மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம்எதிரொலியாக தமிழகத்தில் மின் வினியோகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சென்னையில் மைலாப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் புதன்கிழமை பலமுறைமின்சார வினியோகம் இல்லை. இதே போல மாநிலத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம்அடிக்கடி கட் ஆகி மக்களை அவஸ்தைக்குள்ளாக்கியது.
என்.எல்.சி. முழுமையாக இயங்கியபோது அங்கிருந்து தமிழக மின்சார வாரியத்திற்கு1000 மெகாவாட் மின்சாரம கிடைத்தது. தற்போது இது சுத்தமாக நின்று விட்டது.
இருப்பினும் நீர் மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கூடுதல்மின்சாரத்தை மின்வாரியம் பெற்று வருகிறது. தனியார் மின் உற்பத்திநிலையங்களிடமிருந்தும் கூடுதல் மின்சாரம் பெறப்படுவதாக மின்துறை அமைச்சர்ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
நெய்வேலியில் தினசரி 2,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது வெறும் 160 மெகாவாட் மின்சாரம் மட்டுமே என்.எல்.சி.யில்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
2,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 60,000 டன் பழுப்புநிலக்கரி தேவைப்படும். முதல் அனல் மின் நிலையத்திற்கு 15,000 டன்னும், 2வதுநிலையத்திற்கு 35,000 டன்னும், 3வது நிலைய விரிவாக்கப் பிரிவுக்கு 10,000டன்னும் நிலக்கரி தேவைப்படும்.
தற்போது நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப்போராட்டத்தால் நாளொன்றுக்கு ரூ. 8 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதேநேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 36,000 பேரின் சம்பளத்தை போராட்டகாலத்தில் கட் செய்தால் அரசுக்கு நாளொன்றுக்கு ரூ. 80 லட்சம் மிச்சமாகும்.