பெண் டாக்டர்- நர்ஸ் கட்டிப்புரண்டு சண்டை!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே மேலூர் அரசு மருத்துவமனையில் பணிக்கு தாமதமாக வந்த நர்சைதட்டிக் கேட்ட டாக்டருடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டார் நர்ஸ். இதனால்மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் சேகரிக்கும் நர்சாக பணியாற்றிவருபவர் தமயந்தி. இவர் தினசரி பணிக்கு தாமதமாக வருவதாக நோயாளிகள்,மருத்துவமனையின் தலைமை டாக்டர் சகுந்தலா ராணியிடம் புகார் கூறினர்.இதையடுத்து நேற்று வேலைக்கு வந்த தமயந்தியைக் கூப்பிட்டு டாக்டர்கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த தமயந்தி, டாக்டருடன் கடுமையாகவாக்குவாதம் செய்தார்.
மேலும் டாக்டருடன் தமயந்தி சண்டையில் இறங்கினார்.
இருவரும் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு கை கலந்து கட்டிப்புரண்டு சண்டைபோட்டனர். இந்த சண்டையால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் கூடி நின்றுவேடிக்கை பார்த்தனர்.
அவர்களில் சிலர் இருவரையும் பிரயத்தனப்பட்டு விலக்கி விட்டனர்.
தன்னைத் தாக்கியதாக நர்ஸ் தமயந்தி மீது டாக்டர் சகுந்தலா ராணி போலீஸில் புகார்கொடுத்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications