பணிக்கர் மருமகனால் தீட்டு-கோவிலில் பரிகாரம்
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கும்போது உன்னிகிருஷ்ண பணிக்கரின் மருமகனால்தீட்டு ஏற்பட்டு விட்டதாகவும் இதனால் கோவிலில் 16ம் தேதி தீட்டு கழிக்கும் பரிகார பூஜைநடைபெறவுள்ளதாகவும் கோவில் மேல்சாந்தி கண்டேறு மோகனரு கூறியுள்ளார்.
சபரிமலை கோவிலில் உன்னிகிருஷ்ண பணிக்கர் தேவ பிரசன்னம் பார்த்து பல திடுக்கிடும் தகவல்களைவெளியிட்டார். கோவிலில் பெண், மது வாசனை இருப்பதாகவும் இதற்கு கோவில் நிர்வாகத்தினரே காரணம்என்றும் புகார் கூறினார்.இதையடுத்து நடிகை ஜெயமாலா விவகாரம் பெரிதாக உருவெடுத்தது. ஆனால், ஜெயமாலாவும் பணிக்கரும்சேர்ந்து நாடகமாடுவதாக கோவில் நிர்வாகம் கூறி வருகிறது.
கோவிலின் தலைமை பூசாரியான மேல்சாந்தி கண்டேறு மோகனருவுக்கும் பணிக்கருக்கும் இடையே பேட்டிபோர் நடந்து வருகிறது.
இந் நிலையில், காயஙகுளத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் புது தகவலை வெளியிட்டு பரபரப்பைஏற்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில்,
உன்னிகிருஷ்ண பணிக்கர் தேவ பிரசன்னம் பார்த்த நிகழ்ச்சியில் அவரது மருமகன் மதுவும் கலந்து கொண்டார்.அந்த நாளுக்கு 5 நாட்களுக்கு முன்புதான் மதுவின் பாட்டி இறந்தார். பொதுவாக இறப்பு நிகழ்ச்சிக்கு 11நாட்களுக்குப் பின்னர்தான் கோவில் போன்ற ஸ்தலங்களுக்குச் செல்ல வேண்டும்.
ஆனால் மது 6வது நாளே ஐயப்பன் கோவிலுக்குள சென்று விட்டார். இதன் மூலம் கோவிலில் தீட்டு ஏற்பட்டுவிட்டது என்றார் ராஜன்.
இதனால் புது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் மது கோவிலுக்குள் வந்ததால் ஏற்பட்ட தீட்டை கழிப்பதற்காகவருகிற 16ம் தேதி, ஆடி மாத நடைக்காக கோவில் திறக்கப்படுபோது பரிகார பூஜை நடத்தப்படும் என கோவில்மேல்சாந்தி மோகனரு அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications