மணல், அரிசி கொள்ளையர்களுக்கு குண்டாஸ்: அவசரச் சட்டம் வந்தது!
சென்னை:
மணல் திருட்டு மற்றும் அரிசிக் கடத்தலில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்து நடவடிக்கை எடுக்க வசதியாக தமிழக அரசு அவசரச் சட்டத்தைபிரயோகித்துள்ளது. இதற்கான உத்தரவை ஆளுனர் பர்னாலா பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் அரிசிக் கடத்தலும், மணல் கடத்தலும் அதிகரித்து வருகிறது. இதனால்பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மணல் திருட்டில்ஈடுபடுபவர்களைத் தடுக்க முயலும் அதிகாரிகளை லாரி ஏற்றிக் கொள்ளும்சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இத்தகைய செயலில் ஈடுபடுவோர் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என முதல்வர் கருணாநிதி சமீபத்தில்எச்சரித்தார்.
இந் நிலையில், இதுதொடர்பாக ஆளுனர் பர்னாலா அவசரச் சட்டத்தைப்பிறப்பித்துள்ளார். மணல் திருட்டில் ஈடுபடும் சமூக விரோதிகளை, குண்டர் தடுப்புச்சடடத்தின் கீழ் நிடவடிக்கை எடுத்து தடுப்புக் காவலில் அடைக்க ஏதுவாக இந்தச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல, அரிசி கடத்துவோரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்படுவர் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் 1 ஆண்டுக்கு விசாரணையே இல்லாமல்சிறையில் இருக்க வேண்டி வரும்.












Click it and Unblock the Notifications