For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெபானி மரணம்: மாணவருக்கு 2 ஆண்டு சிறை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவி ஸ்டெபானியை முழு போதையில் காரில் துரத்திச்சென்றபோது, ஏற்பட்ட விபத்தில் சிக்கி அ"தப் பெண் பலியான வழக்கில், கல்லூரி மாணவருக்கு 2 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்டெபானி கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நள்ளிரவில் ஒரு பாருக்குச்சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அதே பாரில் மது அருந்திய கல்லூரி மாணவர் வெங்கடேஷ், ராஜா,நெஸ்லே மற்றும் டென்வர் (வயது 14) ஆகியோர் தங்களது காரில் ஸ்டெபானியை துரத்திச் சென்றனர்.

இதில் ஸ்டெபானி நிலை குலைந்து சாலைத் தடுப்பில் மோதி பலியானார். இந்த சம்பவம் சென்னையைஉலுக்கியது.

இச் சம்பவத்திற்குப் பிறகுதான் 18 வயதுக்கு உட்பட்டவர்களை ஹோட்டல்களில் மது அருந்த அனுமதிக்கக்கூடாது, 10 மணிக்கு மேல் ஹோட்டல் பார்களை திறந்து வைக்கக் கூடாது என்று சென்னை மாநகர காவல்துறைஉத்தரவிட்டது.

ஸ்டெபானி இறந்தது தொடர்பாக நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டு சென்னை 4வது விரைவுநீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இன்று நீதிபதி ராஜா சொக்கலிங்கம் தீர்ப்பு வழங்கினார். தனது தீர்ப்பில், ஸ்டெபானி விபத்தில் தான் இறந்தார்என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு வெங்கடேஷ்தான் முக்கியக் காரணம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே வெங்கடேஷுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

நெஸ்லே, ராஜா ஆகியோர் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தார்.

டென்வர் 16 வயதுக்கு உட்பட்டவராக இருப்பதால் அவர் சம்பந்தமான வழக்கு சிறுவர் நீதிமன்றத்திற்குஏற்கனவே மாற்றப்பட்டு அங்கு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X