பெண் டிஆர்ஓவை தரம் தாழ்த்தவில்லை-அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
ஆந்திர அரிசியை, பெண் டி.ஆர்.ஓவுடன் ஒப்பிட்டுப் பேசியது, அந்த அதிகாரியை தரம் தாழ்த்தும் நோக்கத்தில்அல்ல என்று உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.
சமீபத்தில் நாகர்கோவில் சென்ற அமைச்சர் வேலு, ரேஷன் அரிசி குறித்து கேள்வி கேட்ட நிருபர்களுக்குப் பதில்அளிக்கையில், ஆந்திர அரிசி இந்த மாவட்ட (கன்னியாகுமரி) டி.ஆர்.ஓ. ஜோதி நிர்மலா போல அழகாகஉள்ளது, சட்டீஸ்கர் அரிசி, நம்ம எம்.எல்.ஏ. ராஜன் போல கருப்பாக உள்ளது என்று கூறினார்.அமைச்சரின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் திண்டுக்கல் வந்த அமைச்சர்வேலுவிடம், நாகர்கோவிலில் அவர் பேசியது குறித்து நிருபர்கள் கேட்டபோது, நான் டி.ஆர்.வை தரம் தாழ்த்திப்பேசும் நோக்கில் அவ்வாறு கூறவில்லை. ஒப்பீட்டுக்காகததான் அப்படிக் கூறினேன்.
தரம் தாழ்ந்து பேசும் கட்சியிலிருந்து நான் வரவில்லை. நாங்கள் அப்படி வளரவும் இல்லை. நாங்களும் ஒரு தாய்வயிற்றில் பிறந்தவர்கள்தான். எனவே தரம் தாழ்ந்து பேசும் அளவுக்கு நாங்கள் தரம் தாழ்ந்து போய் விடவில்லைஎன்று தெரிவித்தார் என்று ஓவர் செண்டிமெண்ட் விட்டார்.












Click it and Unblock the Notifications