முத்துநகர் எஸ்பிரசில் வெளிநாட்டு பெண் கற்பழித்து கொலை?
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெளிநாட்டு இளம் பெண் ஒருவர்கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு இச் சம்பவம் நடந்துள்ளது. நேற்று காலை அந்த ரயில் தூத்துக்குடி வந்த பின்னர் ஏ.சி.பயணிகள் பெட்டியை சுத்தம் செய்ய நுழைந்த ரயில்வே ஊழியர் வெளிநாட்டுப் பெண்ணின் உடலைப் பார்த்தார்.சீட்டுக்கு அடியில் 18 வயது பெண்ணின் உடல் கிடந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். அவரது உடல் முழுவதும் நகக் கீறல்களும் ரத்தக்காயங்களும் இருந்தன.
அவரை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
அந்தப் பெண்ணின் உடலை பரிசோதனை செய்யாமல் போலீசார் அடக்கம் செய்துள்ளனர். எதற்காக இவ்வாறுசெய்தனர் என்று தெரியவில்லை. உடலை பரிசோதனை செய்து உண்மையை வெளியில் சொல்ல வேண்டியதுபோலீசாரின் கடமை.












Click it and Unblock the Notifications