இந்தியாவிலும் கால் பதிக்கிறார் மிட்டல்!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்:

உலகின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தஇந்தியருமான லட்சுமி மிட்டல், ஒரிசா மாநிலத்தில் ரூ. 40,000 கோடி முதலீட்டில்,இரும்பு ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளார்.

உலகின் மிகப் பெரிய பணக்கார இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் மிட்டல்.

இரும்பு உருக்காலைத் தொழிலில் உலகின் முன்னணி தொழிலதிபராக இருந்து வரும்மிட்டல், சமீபத்தில்தான் ஆர்சலர் நிறுவனத்தை மிகப் பெரும் போராட்டத்திற்குப்பின்னர் விலைக்கு வாங்கி உலகின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை தொழிலதிபராகமாறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்தியாவுக்கு வந்த மிட்டல், ஒரிசாதலைநகர புவனேஸ்வருக்கு வந்தார். ஒரிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன்பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரிசாவில் மிகப் பெரியஇரும்பு உருக்காலையை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இரு கட்டமாக இந்த உருக்காலை அமைக்கப்படும். இதற்காக ரூ. 40,000 கோடிமுதலீடு செய்யப்படும்.

இதேபோல ஜார்கண்ட் மாநிலத்திலும் ஒரு உருக்காலை ஆரம்பிக்கப்படும் என்றார்மிட்டல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+