டாக்டர் பிரகாஷுடன் மோதிய நடிகை நிர்மலா!
சென்னை:
முன்னாள் துணைவேந்தர் பி.டி.மனோகரனின் மகனுடன் கள்ளத் தொடர்பு வைத்துநகை, பணத்தை சுருட்டியதாக கூறப்படும் டிவி நடிகை நிர்மலா, ஏற்கனவே செக்ஸ்டாக்டர் பிரகாஷுடன் மோதலில் இறங்கியவர் என்று தெரிய வந்துள்ளது.
![]() |
அவரது கணவர் நவீன் குமாருக்கும், டிவி நடிகை நிர்மலாவுக்கும் இடையேகள்ளத்தொடர்பு இருந்ததால்தான் மதுதேவி தற்கொலை செய்து கொண்டார் என்றுஅவர் எழுதி வைத்திருந்த கடிதம் மூலம் தெரிய வந்தது.
இந்த வழக்கில் நவீன்குமார் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற அனைவரும்தலைமறைவாகி விட்டனர். நடிகை நிர்மலாவுக்கு, நவீன்குமார் 100 பவுன் நகைகள்,ரூ. 30 லட்சம் அளவுக்கு பணம் ஆகியவற்றை நவீன்குமார் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து நிர்மலாவையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் நிர்மலா சொந்த மாநிலமான கேரள மாநிலம் கொச்சிக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவருடன் வழக்கறிஞர் ஒருவரும் கூடவே இருக்கிறார்.
நிர்மலாவைப் பிடிக்க போலீஸ் தனிப்படை கொச்சி விரைந்துள்ளது. போலீஸ்பிடியிலிருந்து தப்ப முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிர்மலா மனுதாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையே நிர்மலா குறித்த மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்குடிகாரியாக நிர்மலா திகழ்ந்துள்ளார். தினசரி குடித்து விட்டுத்தான் அவர் வீட்டுக்கேவருவாராம்.
அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீஸார் கையில் நிர்மலா சிக்காவிட்டாலும்கூட 50க்கும் மேற்பட்ட ஜின் பாட்டில்கள் சிக்கினவாம்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன போலீஸார், யார் இதை சாப்பிட்டது என்று வீட்டுவேலைக்காரப் பெண்ணிடம் கேட்டபோது, இதெல்லாம் நிர்மலா சாப்பிட்டதுதான்என்று தெரிவித்தார்.
தினசரி குடித்து விட்டுததான் வீட்டுக்கு வருவாராம். வீட்டுக்கு வந்த பின்னரும்குடிப்பாராம். கூட நவீன்குமாரும் அவ்வப்போது வந்து செல்வார் என்றும் அந்தப்பெண் தெரிவித்தார்.
நடிகை நிர்மலாவுக்கும், பெண்களை ஆபாசமாக படம் எடுத்து இன்டர்நெட்டில்வெளியிட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் பிரகாஷுக்கும் கூடதொடர்பு இருந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.
இருவரும் ஒருமுறை நுங்கம்பாக்கத்தில் உளள ஒரு நட்சத்திர ஹோட்டல் நடனநிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டனராம். அப்போது, தன்னுடன் வரும்படி நிர்மலாவைபிரகாஷ் வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு முடியாது என்று நிர்மலா கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ்,நிர்மலாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தனது கைத்துப்பாக்கியால்நிர்மலாவை சுடவும் அவர் முயற்சித்துள்ளார்.
இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்னும் கூட புகார் நிலுவையில்உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிர்மலாவைக் கைது செய்ய போலீஸார் படுமுனைப்பாக உள்ளனர். அவர் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரக் கூடும்.













Click it and Unblock the Notifications