ம.பொ.சி., கவிஞர் குழந்தை நூல்கள் நாட்டுடமை; குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் பரிவுத் தொகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிலம்புச் செல்வர் ம.பொ.சி மற்றும் கவிஞர் குழந்தை ஆகியோரின் நூல்கள்நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்களது குடும்பத்தினருக்குமுதல்வர் கருணாநிதி பரிவுத் தொகையாக ரூ. 30 லட்சத்தை இன்று வழங்கினார்.
தலைநகர் காத்த தமிழர் என போற்றப்படும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின்நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு விழாவில் பேசிய கருணாநிதி, ம.பொ.சியின்நூல்கள் நாட்டுடமையாக்கப்படும்.அவரது குடும்பத்தினருக்கு பரிவுத் தொகையாக ரூ. 20 லட்சம் வழங்கப்படும் எனஅறிவித்திருந்தார்.
இதேபோல கவிஞர் குழந்தையின் நூல்கள்
நாட்டுடமையாக்கப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் பரிவுத் தொகைவழங்கப்படும் எனவும்.
இதையடுத்து இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ம.பொ.சியின்மகன்கள் திருஞானம் மற்றும் ஞானசிவம் ஆகியோருக்கு தலா ரூ. 10 லட்சம்வழங்கினார்.
இதேபோல, கவிஞர் குழந்தையின் மகள்கள் சமத்துவம் மற்றும் சமரசம்ஆகியோருக்கு தலா ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையை அவர் வழங்கினார்.












Click it and Unblock the Notifications