சேலம் ரயில்வே கோட்டத்தில் இணைகிறது கோவை!
சேலம்:
பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் வரும் கோவை, ஈரோடு போன்ற ஊர்கள்,புதிதாக உருவாக்கப்படவுள்ள சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணையவுள்ளன.
தென்னக ரயில்வேயின் கீழ் இப்போது சென்னை, மதுரை, திருச்சி, பாலக்காடு மற்றும்திருவனந்தபுரம் ஆகிய ஐந்து ரயில்வே கோட்டங்கள் உள்ளன.தற்போது சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டம்உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கோட்டத்தின் கீழ் எந்தெந்த ஊர்களைகொண்டு வருவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களை சேலம் கோட்டத்தின்கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு கேரளாவில் எதிர்ப்புகிளம்பியது.
பாலக்காடு கோட்டத்தின் கீழ் உள்ள கோவை, ஈரோடு ஆகிய ஊர்கள் பெரும்வருவாயை ஈட்டும் நிலையங்கள். இவற்றை பாலக்காடு கோட்டத்திலிருந்து பிரித்தால்பாலக்காடு கோட்டத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என கேரளாவில் உள்ளபல்வேறு கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால் சேலம் கோட்டத்தைத் தொடங்குவதில் பெரும் தாமதம் நிலவி வந்தது.தற்போது இதுதொடர்பாக திட்டவட்டமான முடிவுக்கு ரயில்வே வந்து விட்டது.
சேலம் கோட்டத்தின் கீழ் வரும் ஊர்கள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர்தாமஸ் வர்கீஸ் கூறுகையில், ஜோலார்பேட்டை முதல் கோவை வரையிலான தமிழகபகுதிகள் அனைத்தும் சேலம் கோட்டத்தின் கீழ் வரும்.
மீதமுள்ள பகுதிகளுடன் பாலக்காடு கோட்டம் தொடர்ந்து செயல்படும் என்றார்வர்கீஸ். இதன் மூலம் சேலம் கோட்டத்தின் கீழ் வரும் ஊர்கள் குறித்த சர்ச்சைக்குமுடிவு ஏற்பட்டுள்ளது.
விரைவில் புதிய கோட்டம் உதயமாவதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications