எஸ்.எஸ்.சந்திரன் தம்பி மகள் கைது!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வரதட்சணைக் கொடுமை வழக்கில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகள் ரேவதிகைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகன் தனசேகரன். இவர் தன்னை வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்தியதாக அவரது மனைவி லதா மதுரை போலீஸில் புகார்கொடுத்தார்.

இப்புகாரில் எஸ்.எஸ்.சந்திரன், அவரது மகள் கண்மணி, தனசேகரன் உள்ளிட்ட 7 பேர்குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

அதன் பேரில் நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் சென்னையில் உள்ளஎஸ்.எஸ்.சந்திரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி தனசேகரனைக் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சந்திரன், கண்மணி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் புகாருக்கு ஆளானவர்களில் ஒருவரான எஸ்.எஸ்.சந்திரனின் தம்பிமகள் ரேவதியை கரூர் அருகே வைத்து போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் அவரை மதுரைக்குக் கூட்டி வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர்போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+