கோடை முடிந்தும் கொந்தளிக்கும் சூரியன்!
சென்னை:
கோடை காலம் முடிந்தும் கூட தமிழகத்தில் கடும் வெயில் அடித்து வருவதால் மக்கள்கடும் எரிச்சலில் மூழ்கியுள்ளனர்.
தமிழகத்தில் கோடைக்காலம் முடிவடைந்து விட்டது. தென் மேற்குப் பருவ மழைதென்கோடி தமிழகத்திலும், மேற்குப் பகுதி மாவட்டங்களிலும் சூடு பிடித்துள்ளது.இன்னும் சில நாட்களில் ஆடி மாதம் பிறக்கப்போகிறது.
இருப்பினும் தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்இன்னும் கடும் வெயில் அடித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த காற்று வீசி வந்தது.இருப்பினும் வெயில் குறைந்தபாடில்லை.
குறிப்பாக சென்னை, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயில்நிலவி வருகிறது.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக பலத்த காற்று வீசி வந்தது. ஆயினும்தரைக்காற்றே பெரும்பாலும் வீசுவதால் வெயில் கடுமையாக உள்ளது.
சராசரியாக கடந்த ஒரு வாரத்தில் 103 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெயில் 104 டிகிரியாக இருந்தது. இன்றும் தொடர்ந்துவெயில் சாத்திக் கொண்டுள்ளது.
மதுரையிலும் வெயில் 100 டிகிரியைத் தாண்டித்தான் உள்ளது. இதே நிலைதான்,வேலூர், சேலம் போன்ற நகரங்களிலும். கோடை காலம் முடிந்தும் கூட வெயில் இந்தஅளவுக்கு இருப்பது குறித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சிநிலையத்தில் கேட்டபோது, இப்போது தரைக்காற்று வீசுகிறது.
இதனால்தான் வெயில் அதிகமாக உள்ளது. கடல் காற்று இரவுக்கு மேல்தான் வீசுகிறது.வரும் நாட்களில் நிலக்காற்று குறைந்து, கடல் காற்று அதிகமாக வீசத் தொடங்கினால்இந்த நிலை மாறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் இரண்டாவது கோடைகாலம் என்று குறிப்பிடும் அளவுக்கு வெயில்கொளுத்தி எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் பெரும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications