வேணுகோபாலுடன் ஈகோ மோதல் இல்லை: அன்புமணி
டெல்லி:
டாக்டர் வேணுகோபாலுக்கும் எனக்கும் இடையே ஈகோ மோதல் எதுவும் இல்லை.
அவரது டிஸ்மிஸ் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்யும்என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக இயக்குநர் டாக்டர் வேணுகோபால்சமீபத்தில் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள்வேலைநிறுத்தத்தில் குதித்தனர். தன்னை டிஸ்மிஸ் செய்ததை எதிர்த்து டாக்டர்வேணுகோபால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் டாக்டர் வேணுகோபால் விவகாரம் தொடர்பாக அமைச்சர்அன்புமணி கூறுகையில், டாக்டர் வேணுகோபால், எனது அமைச்சரவையின் கீழ்உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஒன்றின் இயக்குநர். அவ்வளவுதான்.
எனவே எனக்கும், அவருக்கும் இடையே ஈகோ மோதல் இருப்பதற்கான அவசியம்இல்லை. அவர் எனக்குக் கீழ்தான் உள்ளார்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மொத்தம் 17பேர். இதில் 12 பேர் எனது முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
3 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அடிப்படையில்தான் அவர் டிஸ்மிஸ்செய்யப்பட்டார்.
டாக்டர் வேணுகோபாலுக்கு 62 வயது நடந்தபோது இயக்குநர் பதவியில் அவர்அமர்த்தப்பட்டுள்ளார்.
ஓய்வு வயது அது. எனவே அவரது நியமனமே முதலில் சட்டவிரோதமானது. அதுவும்5 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் நியமிக்கப்பட்டது முறையே அல்ல.
அதுதான் அவரை டிஸ்மிஸ் செய்வதற்கு முக்கியக் காரணம் என்றார்.
இதற்கிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்யும் என்று டாக்டர் அன்புமணிகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications