ரஷிய விமானம் விழுந்து 150 பேர் பலி!
இர்குட்ஸ்க்:
சைபீரியாவில உள்ள இர்குட்ஸ்க் விமான நிலையத்தில் தரை இறங்கிய ரஷியவிமானம் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்தபயணிகள், ஊழியர்கள் உள்பட 150 பேர் பலியாகினர்.
சைபீரிய பகுதியில் உள்ள இர்குட்ஸ்க் விமான நிலையத்தில் இன்று காலை ரஷியநாட்டு விமானம் ஒன்று தரையிறங்கியது. அப்போது ஓடு பாதையிலிருந்து விமானம்நழுவியது.இதனால் நிலை தடுமாறிய விமானம், அருகில் இருந்த சுவர் மற்றும் ஒரு கட்டடத்தில்பயங்கரமாக மோதியது. இதைத் தொடர்ந்து விமானம் பல்வேறு துண்டுகளாகவெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 150 பேர் பலியாகியிருப்பார்கள் எனஅஞ்சப்படுகிறது.
விமானத்தில் மொத்தம் 192 பயணிகளும், 8 ஊழியர்களும் இருந்தனர். விபத்தில் 43பேர் படுகாயத்துடன் உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் ஓடுபாதையிலிருந்து நழுவி ஓடி, விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்துஜன்னல்கள் வழியாக பல பயணிகள் கீழே குதித்தனர். அவர்கள் அனைவருக்கும்பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதே விமான நிலையத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த விபத்தில்154 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 ஆண்டுகள் கழித்து அதே ஜூலை மாதம் மீண்டும் ஒரு கோர விபத்து ஏற்பட்டு 150பேர் இறந்துள்ளது ரஷியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications