For Daily Alerts
Just In
இன்சாட் 4சி நாளை ஏவப்படுகிறது
ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய தொலைத் தொடர்பு செயற்கைக்கோள் இன்சாட் 4சி நாளை விண்ணில்செலுத்தப்படுகிறது.
டிடிஎச் சேவையை சீரிய முறையில் மேற்கொள்ள வசதியாக இன்சாட் 4ஏ செயற்கைக்கோள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது 2வதுசெயற்கைக் கோளாக இன்சாட் 4சி நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்கலஏவுதளத்திலிருந்து செலுத்தப்படுகிறது.ஜி.எஸ்.எல்.வி எப்ஓ2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் விண்ணில்ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள2வது ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் முதல் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்குகிறது. நாளைமாலை 4 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான அனைத்துஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
Comments
Story first published: Sunday, July 9, 2006, 5:30 [IST]