ஐ.என்.டி.யூ.சி.யின் அடுத்த கூட்டணி யாருடன்?
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சி கூடுதல் சீட் கொடுக்கிறதோ, அந்தக் கட்சியுடன்கூட்டணி அமைக்கப்படும் என்று தமிழக ஐ.என்.டி.யூ.சி. பொதுச் செயலாளர்ஜி.காளன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி. கடந்த சட்டசபைத் தேர்தலில்கட்சியிலிருந்து தங்களுக்கு சீட் தரப்படாத கோபத்தில் அதிமுகவுடன் கூட்டணிஅமைத்து 2 சீட்களைப் பெற்று தேர்தலில் நின்றது.இதில் சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் இக்கட்சிக்கு வெற்றி கிடைத்தது, அதுவும்சொற்ப ஓட்டுக்களில். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணிஎன்பது குறித்து காளன் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஐ.என்.டி.யூ.சி. அமைப்பு சுய அதிகாரம் படைத்தது. காங்கிரஸ்கட்சி இதனைக் கட்டுப்படுத்த முடியாது. அகில இந்திய ஐ.என்.டி.யூ.சிக்கு மட்டுமேநாங்கள் கட்டுப்படுவோம்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளுடனும்பேசுவோம். எந்தக் கட்சி அதிக சீட் தருகிறதோ, அந்தக் கட்சியுடன் கூட்டணிஅமைப்போம். அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறதா என்பதை இப்போது கூறமுடியாது.
உள்ளாட்சித் தேர்தலிலும் எங்களுக்குத் திருப்தியான முறையில் சீட் கொடுத்தால்கூட்டணியும் தொடரும். கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார் காளன்.












Click it and Unblock the Notifications