கருணாநிதி, ஜெ. இடையே இடைவெளி அதிகரிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையில், முதல்வர் கருணாநிதி அமரும் முன்வரிசை மற்றும்எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஆகியோர் அமரும் முன் வரிசைஇருக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கப்படுகிறது.
தமிழக சட்டசபை அரங்கில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அமரும்இருக்கைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.முதல்வர், அமைச்சர்கள் அமரும் முன்வரிசைக்கும், எதிர்க்கட்சித் தலைவர் அமரும்முன் வரிசைக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கப்படுகிறது. தற்போதுமுதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் (ஜெயலலிதா) மிகவும் நெருங்கிய நிலையில்,எதிரும் புதிருமாக அமரும் நிலை உள்ளது.
இதை மாற்றி கருணாநிதியும், ஜெயலலிதாவும் சற்று தொலைவில் அமரும்படிஇருக்கைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
வருகிற 22ம் தேதி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.அதற்குள் சீரமைப்புப் பணிகள் முடிந்து விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிகளை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.












Click it and Unblock the Notifications