கண்டதேவி: திருமா., கிருஷ்ணசாமி கைது
மதுரை:
சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் இன்று நடக்கும் தேரோட்டத்தில் கலந்துகொள்வதற்காக மதுரையிலிருந்து புறப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடப்பதுவழக்கம். இந்தத் தேரோட்டத்தில் முக்குலத்தோர் இன மக்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். தலித் மக்களுக்கு வடம் பிடித்து தேர் இழுக்கஅனுமதிக்கப்படுவதில்லை.இதற்கு புதிய தமிழகம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கடந்த சிலஆண்டுகளாக கண்டதேவி கோவில் தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் சில கடுமையான உத்தரவுகளின் பேரில்கடந்த சில ஒரு சில ஆண்டுகளாக பலத்த பாதுகாப்புடன் தேரோட்டம் நடத்தப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக 5மாவட்டங்களைச் சேர்ந்த 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் போலீஸார் தீவிரப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலைமதுரையிலிருந்து 1000 பேருடன் கண்டதேவி புறப்பட்டுச் சென்று தேரோட்டத்தில்பங்கேற்பேன் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி அவர் இன்று காலை கிளம்பியபோது அவரை தடுத்து நிறுத்திய போலீஸார்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரைக் கைது செய்தனர். அவருடன் சிலரும்கைது செய்யப்பட்டனர்.
இதேபோல மதுரையிலிருந்து கண்டதேவிக்கு புறப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள்கட்சி பொதுச் செயலாளர் தொல். திருமாவளவனையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications