பங்கு விலக்கல்: திமுக நிலைக்கு லாலு ஆதரவு
டெல்லி:
பொத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் பிரச்சினையில் திமுகஎடுத்துள்ள நிலைக்கு மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆதரவுதெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், என்.எல்.சி. பங்குகளைதனியாருக்கு விற்பதை எதிர்த்து திமுக தலைவரும, தமிழக முதல்வருமானகருணாநிதி எடுத்த நிலை சரியானதுதான்.பிராந்தியக் கட்சிகளே இப்படித்தான் என்று ஒதுக்கி விட முடியாது.
எங்களது மாநில இளைஞர்கள் வேலையில்லாமல் தெருவில் அலைவதை நாங்கள்ஏற்றுக் கொள்ள முடியாது.
வேலயில்லாமல் தீவிரவாதிகளாக அவர்கள மாறுவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர், கூட்டணிக்கட்சிகளின் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார் என பாஜக கூறுவது விஷமப் பிரசாரம்.
அவர்கள் ஆட்சியில் இருந்தபோது கூட கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளுக்குமத்தியில்தான் ஆட்சி நடத்தினார்கள். வாஜ்பாய் மட்டும் பலமான பிரதமராகவாஇருந்தார்? அதை பாஜக மறந்து விடக் கூடாது.
தேசியக் கட்சிகளுக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் குறையும்போது, பிராந்தியக்கட்சிகள் வலுவடைவது இயற்கையான விஷயம். முன்பு போல இல்லாமல் இப்போதுபிராந்தியக் கட்சிகள் நல்ல வலுவுடன் உள்ளன. இதை தேசிய கட்சிகள் ஏற்கவேண்டும் என்றார் லாலு.












Click it and Unblock the Notifications