அகதி முகாமில் சிறுவன் மீது தாக்குதல்: போலீஸ் மீது வழக்கு
ராமேஸ்வரம்:
மண்டபம் அகதிகள் முகாமில் 7 வயது சிறுவன் போலீஸாரால் தாக்கப்பட்டான்.இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வரும் தமிழர்கள், மண்டபம்முகாமுக்குத்தான் முதலில் அனுப்பி வைக்கப்படுவர். பின்னர் தேவைப்பட்டால் வேறுமுகாம்களுக்கு அவர்கள் பிரித்து அனுப்பப்படுவர்.இந்த நிலையில் இலங்கையிலிருந்து வந்து மண்டபம் முகாமில் தங்கியுள்ள மதுசூதன்என்ற 7 வயது சிறுவன் கடந்த 7ம் தேதி போலீஸார் சிலரால் தாக்கப்பட்டதாககூறப்படுகிறது.
ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக அந்த சிறுவனை போலீஸார் பிடித்து கடுமையாகவிசாரித்துள்ளனர். அப்போது சிறுவனை அடிக்கவும் செய்துள்ளனர்.
இதுகுறித்துக் கேள்விப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள்,மண்டபம்-ராமேஸ்வரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேந்திர குமார் ரத்தோர்,சம்பந்தப்பட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும், சாலைமறியலில் ஈடுபட்ட 450 அகதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதற்கிடையே இன்று காலை தனுஷ்கோடியிலிருந்து 131 தமிழர்கள் அகதிகளாகவந்தனர். அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications