கோவில் நிலங்கள்: அரசுக்கு இந்து முன்னணி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில் நிலங்களைக் கையகப்படுத்தி அதை ஏழைகளுக்கு கொடுக்க தமிழக அரசுமுயன்றால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணிஅமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவில்களுக்கு நிரந்தரவருமானத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பது, அந்தக் கோவில்களுக்குச் சொந்தமானநிலங்கள்தான்.அப்படிப்பட்ட நிலங்களை கையகப்படுத்தி அதை ஏழைகளுக்கு வழங்க அரசு முடிவுசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.
அரசு இந்த முடிவை எடுத்தால், கோவில்கள் அழிந்து போய் விடும். இதற்குப் பதில்,பெரும் பணக்காரர்களிடம் உள்ள உபரி நிலங்களைப் பறித்து அதை ஏழைகளுக்குக்கொடுக்கலாம்.
கோவில் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் திமுக அரசு இறங்கினால் அதைகண்டித்து இந்து மத அமைப்புகளுடன் இணைந்து மிகப் பெரிய மாநிலம் தழுவியபோராட்டத்தை நடத்துவோம்.
சத்யாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுளளார் ராம. கோபாலன்.












Click it and Unblock the Notifications