ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெடித்து சிதறியது:இன்சாட் 4சி செயற்கை கோள் ஏவுவது தோல்வி
ஸ்ரீஹரிகோட்டா:
ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இன்சாட் 4சி செயற்கைக் கோளை ஏவுவதுதோல்வியில் முடிந்தது. செயற்கைக் கோளுடன் செலுத்தப்பட்ட சில வினாடிகளில்ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெடித்துச் சிதறியது.
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட் 4சி சென்னைஅருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்றுமாலை விண்ணில் செலுத்தப்பட்டது.
இதுவரை இந்தியா ஏவிய செயற்கைக் கோள்களிலேயே அதிக எடை கொண்டது இதுஎன்பது குறிப்பிடத்தக்ககது. இதன் எடை 2,168 கிலோ ஆகும்.
![]() |
| ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும் முன் |
இந்த செயற்கைக் கோள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்ஓ-2ராக்கெட் மூலம் இன்று மாலை 4.38 மணிக்கு ஏவப்படுவதாக இருந்தது.
அனைத்து ஏற்பாடுளும் முடிந்த நிலையில் ராக்கெட்டை செலுத்துவது திடீரெனதள்ளிப் போடப்பட்டது. மாலை 5.40 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் எனவிஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாமதத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து மாலை 5.40மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட்டது. ஆனால் கிளம்பிய 5வினாடிகளிலேயே ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெடித்துச் சிதறியது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட்டின் முதல் கட்டம் பிரியாமல்போனதால் ராக்கெட் வெடித்துச் சிதறியது. இதன் மூலம் இன்சாட் 4சி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெடித்துச் சிதறியதால் விஞ்ஞானிகள் பெரும் அதிர்ச்சிஅடைந்தனர். ராக்கெட்டின் முதல் கட்டம் சரியாக பிரியாத காரணத்தால்தான் இந்தமயற்சி தோல்வியில் டிந்ததாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.
இன்சாட் 4சி செயற்கைக் கோளின் மதிப்பு ரூ. 400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வியால் ராக்கெட்டுடன் சேர்த்து இஸ்ரோவுக்கு ரூ. 1,000 கோடி வரைஇழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று அக்னி ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்த நிலையில் இன்றுஜிஎஸ்எல்வியும் தோல்வியைத் தழுவியது விஞ்ஞானிகளை பெரும் கவலையில்ஆழ்த்தியுள்ளது.













Click it and Unblock the Notifications