ஸ்டிரைக்: 28ம் தேதி வங்கிகள் இயங்காது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வரும் 28ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர்.இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 1 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அவற்றை உடனே நிரப்ப வேண்டும், வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது, வங்கி ஊழியர்களுக்கு சரியானபென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வற்புறுத்தி இந்தியாமுழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர்.
அன்றைய தினம் தான் நாடாளுமன்றம் கூடுகிறது என்பதாலும், தங்களது கோரிக்கை உடனே நாடாளுன்றத்தைஎட்ட வேண்டும் என்ற நோக்கிலும் 28ம் தேதி ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications