பிபிஓ: லீவ் போடுவதில் இந்தியர்கள் முதலிடம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆபீசுக்கு லீவ் போடுவதில், உலக அளவில் இந்திய பிபிஓ கம்பெனி ஊழியர்கள்தான் முதலிடத்தில்உள்ளார்களாம்.
இது தொடர்பாக ஆஸ்பெக்ட் சாப்ட்பேர் நிறுவனம், கால் சென்டர்ஸ், டாட்நெட் ஆகியவை இணைந்து நடத்தியஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள்:இந்திய பிபிஓ நிறுவனங்களில் தினமும் சராசரியாக மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் பேர் ஆபீசுக்குவருவதில்லையாம். இது உலகிலேயே மிக அதிகம் என்கிறார்கள்.
ஒரே மாதிரியான வேலையால் சலித்து போவது, வாடிக்கையாளருடன் மோதல், வீட்ல விஷேசம் உள்ளிட்ட பலகாரணங்களால் லீவ் போடுகின்றனர் பிபிஓ ஊழியர்கள்.
இந்தியாவில் 600 கால் சென்டர்களை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடம் ஒப்பிடும் போது பிற ஆசிய நாட்டு ஊழியர்களின் நிலைமை பரவாயில்லை. மலேசியாவில்தினமும் 8 சதவீத ஊழியர்கள் லீவ் போடுகின்றனர். பிலிப்பைன்ஸில் 6 சதவீதமாகவும், சிங்கப்பூரில் 5சதவீதமாகவும் உள்ளது. தென் கொரியாவில் மிகக் குறைவாக 3 சதவீதமாக மட்டுமே உள்ளது.












Click it and Unblock the Notifications