ஏலத்துக்கு வரும் பிரேமானந்தாவின் சொத்துக்கள்!
மதுரை:
செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவின் ஆசிரம சொத்துக்களை ஏலம் விடவிதிக்கப்பட்டிருந்த தடையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
![]() |
அவர் ரூ 9.79 கோடி வரி பாக்கி செலுத்த வேண்டியிருந்ததால், அதைவசூலிப்பதற்காக ஆசிரம சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்து கடந்த ஆண்டுபிப்ரவரி மாதம் 7ம் தேதி ஆசிரமத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது வருமானவரித்துறை.
இதையடுத்து இந்த ஏலத்துக்குத் தடை விதிக்கக் கோரி ஆசிரம நிர்வாகி தமயந்திமதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
![]() |
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமனறக் கிளை ஏலம் விட தடை விதித்தது. இந்தத்தீர்ப்பை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில், மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பத்ருடு, ஆசிரமத்தை பொது ஏலத்திறகுக் கொண்டுவர விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார். இவ்வழக்கின்பிரதான மனு மீதான விசாரணையை 2 வாரத்தில் நடத்தி முடிக்கவும் அவர்உத்தரவிட்டார்.














Click it and Unblock the Notifications