நைட்டியில் ரவுடி.. போலீஸ் கிறுகிறு
Subscribe to Oneindia Tamil
குளித்தலை:
குளித்தலையில் நைட்டி அணிந்து போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்ப முயன்றான் ஒரு ரவுடி.
குளித்தலை சண்முகானந்தா தியேட்டர் அருகே வசிப்பவர் எட்டுக்கால்பூச்சி என்கிற செந்தில் (35).ரெளடித்தனத்துக்கு பேர் போன இந்த பூச்சி காவிரி பாலத்தில் வந்த பால்பாண்டி என்பவரிடம் கத்தியை காட்டிமிரட்டி 30 ரூபாயைப் பறித்தான்.பால்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் செந்திலைதேடி அவனது வீட்டுக்கு சென்றனர்.
போலீஸ் தன்னை தேடி வருவதை அறிந்த செந்தில், மனைவியிைன் நைட்டியை அணிந்து முகத்தைமூடிக்கொண்டு தூங்குவது போல் நடித்தான். போலீசார் எழுப்ப முயன்றும் அவர் எழவில்லை. இதையடுத்துஉடல் நிலை சரியில்லாமல் அந்தப் பெண் படுத்திருப்பதாக நினைத்துக் கொண்டு போலீசார் திரும்பினர்.
ஆனால் எதிரில் செந்திலின் மனைவி வந்தார். இதைப் பார்த்ததும் கிறுகிறுத்த போலீசார் மீண்டும் வீட்டுக்குச்சென்று செந்திலைப் பிடித்தனர். நைட்டில் படு செக்சியாக படுத்திருந்த செந்திலை குளித்தலை குற்றவியல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications