சபரிமலை சர்ச்சைக்கு கர்நாடக துறவி காரணம்?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

கர்நாடகத்தில் உள்ள ஒரு பிரபல ஆன்மீகத் தலைவரின் தூண்டுதலின் பேரிலேயேஐயப்பன் சிலையைத் தொட்டதாக நாடகமாடுகிறார் நடிகை ஜெயமாலா என்றுஐயப்பன் கோவிலுக்கு பூக்கள் அனுப்பும் பூ வியாபாரி கூறியுள்ளார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ஜோதி வர்மா. இவர்தான் சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கு தினசரி பூக்களை அனுப்பி வருகிறார். சபரிமலை சர்ச்சை குறித்து வர்மாகூறுகையில், கர்நாடகத்தில் புகழ்பெற்ற ஒரு ஆன்மீகவாதி இருக்கிறார்.

அவருக்கு அங்கு 20 லட்சம் பக்தர்கள் உள்ளனர். இந்த பக்தர்கள் மெல்ல மெல்லஐயப்பன் மீது ஈடுபாடு கொண்டு சபரிமலையை நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

சுமார் 19 லட்சம் பேர் மாதம்தோறும் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.இதனால் அந்த ஆன்மீகவாதியின் செல்வாக்கு குறையத் தொடங்கியுள்ளது.

இந்த அதிர்ச்சி அவர்களை நிலை குலைய செய்ததோடு, ஐயப்பனின் புகழைக்கெடுக்கும் அளவுக்கு அவர்களைக் கொண்டு சென்று விட்டது. ஐயப்பனின் பெயரைக்கெடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் ஜெயமாலா மூலம் இப்படி ஒருநாடகமாடி இருக்கிறார்கள்.

இந்தப் பெரிய பாவத்தால் ஐயப்பனின் கோபத்திற்கு ஆளாகி இருப்பவர்கள் நிச்சயம்தண்டனையை அனுபவிப்பார்கள்.

பந்தள, கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தான இளவரசிகள் கூட இதுவரை ஐயப்பன்கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டதில்லை.

இவர்களை எல்லாம் விட மிக முக்கியமானவரா இந்த நடிகை? இவர் என்னஅவ்வளவு சிறப்பு வாய்ந்தவரா? இது அனைத்து மக்களுக்கும் தெரியும் என்றார்வர்மா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+