சென்னை விமான நிலையத்தில் 1,000 கிலோஒட்டக கறி தீவைத்து எரிப்பு!
சென்னை:
துபாயிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த ஒட்டகக் கறியை யாரும் எடுத்துப்போக வராததால், விமான நிலைய ஊழியர்கள் அந்தக் கறியை தீவைத்து எரித்தனர்.
துபாயிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் இருந்த ஒருபெரிய பெட்டியைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் சந்தேகமடைந்தனர். அந்தப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் மாமிசம் இருப்பது தெரிய வந்தது.அது ஒட்டகக் கறியாகும். ரத்தம் உறையாத நிலையில் அக்கறி இருந்தது. ஒட்டகத்தின்கறி வெட்டப்பட்டு 24 மணி நேரம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். ஆனால்அதன் பின்னர் நாற ஆரம்பித்து விடும்.
ஒட்டகக் கறி பார்சலுக்கு ஆர்டர் கொடுத்திருந்தவர்கள் வரும் வரை அந்தப்பெட்டியை குளிர்சாதன அறையில் வைக்க அதிகாரிகள் முடிவு செய்து குளிர்சாதனைஅறையில் வைத்தனர்.
ஆனால் நேரம் ஆக ஆக பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. மேலும்,ஒட்டகக் கறியில் புழுக்களும் நெளிய ஆரம்பித்தன. இதையடுத்து அந்தக் கறியைஎரித்து விட முடிவு செய்யப்பட்டது.
விமான நிலையத்துக்கு வெளியே அதைக் கொண்டு போய் திறந்த வெளியில் வைத்துபெட்ரோல் ஊற்றி ஒட்டகக் கறியை விமான நிலைய ஊழியர்கள் எரித்தனர்.
இதனால் அந்தப் பகுதியே சிறிது நேரத்திற்கு நாற்றத்தால் திணறிப் போனது. இந்தஒட்டக் கறியை சென்னையைச் சேர்ந்த யாரோ ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளனர்.
ஆனால் கறி இருந்த பார்சலை வாங்க யாரும் வரவில்லை. திருமண விருந்தில்பிரியாணி செய்வதற்காக இந்தக் கறி வாங்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications