அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது ஐ.என்.டி.யூ.சி
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தமிழகஐ.என்.டி.யூ.சியின் பொதுச் செயலாளர் காளன் மீண்டும் காங்கிரஸில் இணைவதாகஅறிவித்துள்ளார்.
தமிழக ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கம், கடந்த சட்டசபைத் தேர்தலில் தங்களுக்கும்தேர்தலில் போட்டியிட சீட் தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைக் கோரியது.ஆனால் கட்சி மேலிடம் கண்டுகொள்ளவில்லை. இதனால் கோபமடைந்தஐ.என்.டி.யூசி தலைவர் சுப்பையா, பொதுச் செயலாளர் காளன் ஆகியோர்ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தனர்.
இந்த அமைப்புக்கு 2 சீட் தரப்பட்டது. வில்லிவாக்கம் மற்றும் சிங்காநல்லூரில் இந்தஅமைப்பின் வேட்பாளர்கள் இரட்டை இலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடடனர்.வில்லிவாக்கத்தில் காளனும், சிங்காநல்லூரில் சின்னச்சாமியும் போட்டியிட்டனர்.
இருவரும் அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்து இரட்டை இலைச் சின்னத்தில்போட்டியிட்டனர். இதில் சின்னச்சாமி மட்டும் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக காளன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த தேர்தலில்அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம்.
இதனால் அமைப்பில் பிளவு ஏற்பட்டது போல சிலர் செய்தி பரப்பினர். உண்மைஅதுவல்ல. அகில இந்திய ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சஞ்சீவ ரெட்டிசென்னை வந்துஇரு தரப்பிலும் பேசினார்.
எனக்கும், தலைவர் சுப்பையாவுக்கும் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றுஅனைவரிடம் ரெட்டி அறிவித்தார். இதன் மூலம் சுமூக நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அதிமுக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகுகிறோம். காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியின் தலைமையில் தொடர்ந்து செயல்படுவோம். எங்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் சிறந்த முறையில் பிரதிநிதித்துவம் தரப்படும் என சஞ்சீவ ரெட்டிதெரிவித்துள்ளார்.
நாங்கள் மீண்டும் காங்கிரஸுக்குப் போவது குறித்து ஜெயலலிதாவிடம் தெரிவித்துவிட்டேன். அதில் அவருக்கு ஒரு மன வருத்தம் இலலை என்றார் காளன்.
அதிமுகவில் கூட்டணியில் இருந்து காளன் விலகினாலும், அவருடன் சென்றசின்னச்சாமி எம்எல்ஏ தொடர்ந்து அதிமுகவிலேயே நீடிக்க முடிவு செய்துள்ளார்.இதையடுத்து அவரை காளன் ஐஎன்டியூசில் இருந்து நீக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications