ஜெயமாலா-குருவாயூரில் இன்று பரிகார பூஜை!
Subscribe to Oneindia Tamil
குருவாயூர்:
நடிகை ஜெயமாலா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தது தொடர்பாக கேரள கோவில்களில் பரிகாரபூஜைகள் நடத்தப்படுகின்றன. இன்று குருவாயூர் கோவிலில் பரிகாரம் நடந்தது.
![]() |
சபரிமலை மட்டுமின்றி கேரளாவில் உள்ள முக்கிய கோவில்களிலும் இந்த பரிகார பூஜைகளை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதலில் குருவாயூர் கோவிலில் இன்று காலை 6.15 மணிக்கு பரிகார பூஜை தொடங்கியது.நெய்விளக்கு ஏற்றப்பட்டு கதளிப்பழம் சமர்ப்பணம் செய்யப்பட்டது. பின்னர் தேவனுக்கு திருமுடிமாலைஅணிவிக்கப்பட்டது. பகவதி அம்மனுக்கு சுழல் வழிபாடு செய்யப்பட்டது. இந்த பரிகார பூஜையில் திருவிதாங்கூர்தேவம் போர்டு தலைவர் ஸ்ரீராமன்நாயர், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குருவாயூரைத் தொடர்ந்து பல்வேறு கோவில்களிலும் பரிகார பூஜைகள் நடத்தப்படுகின்றன.













Click it and Unblock the Notifications