நடிகர் சங்கம்-போட்டியிலிருந்து விலகினார் நாசர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்செய்திருந்த நடிகர் நாசர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டார்.
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது. இதில் தலைவர்பதவிக்கு நடிகர் சரத்குமார் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது கடைசி நிமிடத்தில் நடிகர் நாசர் வேட்புமனு தாக்கல் செய்துபரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து நாசரை சமாதானப்படுத்தி அவரை போட்டியிலிருந்து விலக வைக்கமுயற்சிகள் நடந்தன. இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
இந்த நிலையில் நேற்று தனது மனுவை நாசர் வாபஸ் பெற்றுக் கொண்டார்.இதையடுத்து சரத்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications