சிவாஜி சிலைக்கு மாற்று இடம்: கருணாநிதி ஆய்வு
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை வேறு இடத்தில் வைப்பது தொடர்பாகமாற்று இடங்கள் சிலவற்றை முதல்வர் கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
சிவாஜிகணேசனுக்கு கடற்கரையில் சிலை வைக்க முடிவு செய்த தமிழக அரசு, காந்திசிலை அருகே, ராணி மேரிக் கல்லூரி எதிரே சிலையை நிறுவப் போவதாகஅறிவித்தது.இதற்கான வேலைகளும் முடிந்து விட்டன. இந்த நிலையில் காந்தி சிலை அருகேசிவாஜி சிலையை வைக்கக் கூடாது, அப்படி வைத்தால் காந்தியின் முக்கியத்துவம்குறைந்து விடும் என்று கூறி சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவர் உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சிவாஜி சிலையை காந்தி சிலை அருகேநிறுவாமல் வேறு இடத்தில் வைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்குமாறு கோரிக்கைவிடுத்தனர். மேலும் மாற்று இடம் தொடர்பாக திங்கள்கிழமையன்று தமிழக அரசுஅறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து சிவாஜி சிலையை வேறு இடத்தில் வைக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பாக சில மாற்று இடங்களைத் தேர்வு செய்து அதிகாரிகள்,முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்தனர்.
அதன்படி தியாகராயர் சாலை-செவாலியே சிவாஜி சாலை சந்திப்பு (இந்தசாலையில்தான் சிவாஜியின் வீடு உள்ளது), சிந்தாதிரிப்பேட்டை- அண்ணா சாலைசந்திப்பு, கடற்கரையில் வேறு இடம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் சிலையைவைக்கலாம் என அதிகாரிகள் கருணாநதியிடம் பரிந்துரைத்துள்ளனர்.
இதையடுத்து இந்த இடங்களை நேற்று அதிகாலையில் கருணாநிதி காரில் சென்றுநேரில் பார்த்து ஆய்வு செய்தார். 21ம் தேதி சிலையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அன்றே சிலையை திறந்து விட கருணாநிதி தீவிரமாக உள்ளார். எனவே மாற்றுஇடத்தில் சிலையை நிறுவுவது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என்றுதெரிகிறது.