இன்று என்ஜீனியரிங் கவுன்சிலிங் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) இன்று முதல்தொடங்குகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட 4 நகரங்களில் கவுன்சிலிங்நடைபெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும்இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது.வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி வரை கவுன்சிலிங் தொடர்ந்து நடைபெறும். சென்னைஅண்ணா பல்கலைக்கழகம், மதுரை தியாராஜர் பொறியியல் கல்லூரி, கோவை அரசுதொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி ஆகிய இடங்களில் கவுன்சிலிங்நடைபெறும்.
இதில் 70,000 மாணவ, மாணவியர் கலந்து கொள்ளவுள்ளனர்.
உடல் ஊனற்றோர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு இன்று முதல் 19ம் தேதி வரைகவுன்சிலிங் நடைபெறும். 20ம் தேதி வெளி மாநில மாணவர்களுக்கு நடைபெறும்.
அதன் பின்னர் 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை பொதுப் பிரிவுமாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும்.












Click it and Unblock the Notifications