உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட வக்கீல் கைது!
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்திய வக்கீலை தட்டிக் கேட்கவந்த அவரது மனைவியின் உறவினர்கள் மீது அந்த வக்கீல் துப்பாக்கியால் சுட்டார்.இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நெல்லை மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன்.இவர் ஒரு வழக்கறிஞர். தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திவந்தார் தமிழ்ச் செல்வன்.இதை அறிந்த அந்தப் பெண்மணியின் உறவினர்கள் நேற்று இரவு தமிழ்ச் செல்வன்வீட்டுக்கு வந்தனர். தங்களது பெண்ணைக் கொடுமைப்படுத்துவது தொடர்பாகதமிழ்ச்செல்வனை தட்டிக் கேட்டனர்.
அப்போது கோபமடைந்த தமிழ்ச் செல்வன் தனது துப்பாக்கியை எடுத்து திடீரெனசுட்டார். இதில் முருகையா பாண்டியன் என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாகஅவரை நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.
தமிழ்ச் செல்வனைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications