ஜனனி முன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கள்ள நோட்டு வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜனனி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 26ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்கில் கைதான ஜனனியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ 1.4 கோடியில்30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருந்தன.
இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்ய திட்டமிட்ட நிலையில் முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜனனியும் அவரது தாயார் ரமீஜாவும் மனு தாக்கல் செய்தனர்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த மனுமீதான விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications