சீனாவின் சவாலை சந்திக்க இந்தியா தயார்-தயாநிதி

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

தகவல் தொழில்நுட்பத் துறையில் சீனாவின் போட்டியை இந்தியா வரவேற்கிறதுஎன்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

லண்டனில் உள்ள இந்தியா இல்லத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தயாநிதிமாறன் பேசுகையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் சீனா போன்ற நாடுகளின்சவால்களை சந்திக்க இந்தியா பயப்படவில்லை.

இது பெரிய துறை. யார் வேண்டுமானாலும் இதில் போட்டியிடலாம். ஆய்வு மற்றும்மேம்பாட்டுப் பிரிவில் இந்தியா தீவிர கவனம் செலுத்தவுள்ளது.

முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவுகள்இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

மின்னணு நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்த இந்திய அரசு தீவிரமாக உள்ளது.இதுதொடர்பான பொதுத் திட்டம் 2007ம் ஆண்டில் தயாராகி விடும்.

இந்தியாவின் சிலிக்கான் நகரம் என்று பெங்களூர் கருதப்பட்டாலும் கூட அடிப்படைக்கட்டமைப்பு, வேகமான வளர்ச்சியை சமாளிக்க முடியாமல் பெங்களூர் திணறிவருகிறது. அதேசமயம், சென்னை, ஹைதராபாத், புனே, நோய்டா ஆகிய நகரங்கள்அதிவேமாக வளர்ந்து வருகின்றன.

இதேபோல ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் இத்துறையில்நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகின்றன என்றார் தயாநிதி மாறன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+