சட்டீஸ்கர்-நக்சல்கள் தாக்குதலில் 20 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தண்டீவரா:
சட்டீஸ்கர் மாநிலம் எரபார் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்கள்மீது நக்சலைட்டுகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பேர்கொல்லப்பட்டனர். 150 பேர் காயமடைந்தனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகமாநில அரசின் சார்பில் எரபார் என்ற இடத்தில், நிவாரண முகாம்அமைக்கப்பட்டுள்ளது. நக்சலைட்டுகளின் மிரட்டலுக்குப் பயந்து கிராமங்களைவிட்டு வெளியேறியவர்கள் இங்கு தங்கியுள்ளனர்.இந்த முகாமுக்குள் இன்று அதிகாலை மக்கள் மீட்பு கொரில்லாப் படை என்றநக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் புகுந்து கண்மூடித்தனமாகசுட்டனர்.
இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். 150 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த முகாமுக்கு மிக அருகில்தான் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முகாம் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications