ஷீரிடியில் பிற்பட்ட வகுப்பினர் சங்க மாநாடு
ஒளரங்காபாத்:
உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுதொடர்பான விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க மகாராஷ்டிரமாநிலம் ஷீரடியில் செப்டம்பர் 17ம் தேதி மாபெரும் மாநாடு நடத்த அகில இந்தியபிற பிற்பட்ட வகுப்பினருக்கான சங்கம் முடிவு செய்துள்ளது.
சங்கத்தின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் ஹனுமந்த் உப்ரே இதுகுறித்துசெய்தியாளர்களிடம் கூறுகையில், பிற பிற்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்விநிறுவனங்களில் இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நாடு தழுவிய அளவில்நடந்து வருகிறது.மகாராஷ்டிர மாநில அளவில் நான் பிரசாரம் செய்து வருகிறேன். இந்தபிரசாரத்தின்போது இட ஒதுக்கீட்டுக்கு மிகப் பெரும் ஆதரவு இருப்பது தெரியவந்தது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது ஜாதி ரீதியான கணக்கெடுப்பும் அவசியம்,பிற பிற்பட்ட வகுப்பினரின் பொருளாதார நிலை குறித்த தகவல்களை வெளியிடுவது,
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டைவழங்க வேண்டும் மற்றும் பிற பிற்பட்ட வகுப்பினருக்கான கிரீமீ லேயர்நிபந்தனையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திமாநாட்டின்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் மாநாட்டின் போது இதுதொடர்பாக அடுத்த கட்டநடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்றார் உப்ரே.












Click it and Unblock the Notifications