வெடிகுண்டு மிரட்டல்: சிவக்குமார் ரசிகர் மீது வழக்குப் பதிவு
சென்னை:
நடிகர் சிவக்குமார் வீட்டில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், சென்னையில்வெடிகுண்டுகள் வெடிக்கப் போவதாகவும் கூறி மிரட்டல் விடுத்து தேவையில்லாமல்போலீஸாரை டென்ஷன் படுத்திய மலேசிய ரசிகர் மீது சென்னை சைபர் குற்றத்தடுப்புப் போலஸீார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மலேசியாவைச் சேர்ந்த காசி டத்தோ என்பவர், நடிகர் சிவக்குமாரிடம் அவரது மகன்நடிகர் சூர்யாவிடம் பேசுவதற்காக பலமுறை முயற்சித்தும் அவர்களிடம் பேசமுடியாமல் போனது.தன்னை மதிக்கவில்லையே என்று ஆத்திரமடைந்த அவர் அதிமுக அலுவலகத்திற்குப்போன் செய்து சிவக்குமார் வீட்டு தொலைபேசி எண்ணைக் கொடுத்து இந்த வீட்டில்தீவிரவாதிகள் ஒளிந்திருப்பதாகவும், சென்னையில் தி.நிகர், பாண்டி பஜார் ஆகியஇடங்களில் குண்டுவெடிக்கும் எனவும் கூறினார்.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் டத்தோவின் செயல் குறித்துத்தெரிய வந்தது. தனது செயலுக்கு டத்தோ வருத்தம், மன்னிப்பும் கேட்டுசிவக்குமாரிடம் பேசினார்.
தன் மீது கொண்ட அன்புகாரணமாக டத்தோ இவ்வாறு செய்து விட்டதாகபோலீஸாரிடம் கூறிய சிவக்குமார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுகோரினார்.
இருப்பினும் போலீஸாரை தேவையில்லாமல் அலைக்கழிக்க வைத்ததற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையர் லத்திகா சரண் முடிவுசெய்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் டத்தோ மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர். அவரிடம் எப்படி விசாரணை நடத்துவது என்பது குறித்து போலீஸார்விவாதித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications