ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
செங்குன்றம்:
ஓடும் ரயிலில் பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 21 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயந்தி (42). இவரும் கெங்காபாய்(46) என்ற பெண்ணும் பூந்தமல்லி அருகே உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திற்கு சென்றனர்.இரவு 7 மணிக்கு அவர்கள் இருவரும் திருநின்றவூரிலிந்து ரயிலில் ஆவடிக்கு திரும்பிக் காாெண்டிருந்தனர்.
அவர்கள் இருந்த ரயில் பெட்டியில் மூன்று ஆண்கள் பயணம் செய்தனர். பட்டாபிராம் இந்து கல்லூரிநிறுத்தத்தில் ரயில் புறப்படும் நேரத்தில் அந்தப் பெட்டியில் ஏறிய ஒரு நபர் கத்தியைக் காட்டி ஆண் பயணிகள்மூன்று பேரையும் மிரட்டி இறக்கிவிட்டான்.
இதையடுத்து, ஜெயந்தி அணிந்திருந்த 20 பவுன் நகைகளை பறித்தான். அடுத்து கெங்காபாயின் நகைகளைபறிக்க முயற்சித்தான். அதற்குள் ஆவடி ரயில் நிலையம் வந்ததால் அவரிடமிருந்து ஒரு மோதிரத்தை மட்டும்பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து ஓடித் தப்பிவிட்டான்.












Click it and Unblock the Notifications