இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் தற்கொலை
சென்னை:
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் வி.பி.சத்யன் ரயில் முன் பாய்ந்துதற்கொலை செய்து கொண்டார்.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் வி.பி.சத்யன். கேரளாவைச் சேர்ந்தஇவர் சென்னை இந்தியன் வங்கியில் பணியாற்றி வந்தார்.சிறந்த நடுக்கள ஆட்டக்காரரான சத்யன், இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர்.விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அணியின் துணை பயிற்சியாளராகவும்பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை அருகே பல்லாவரம் ரயில் நிலையத்தில்,கன்னியாகுமரியிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த ரயில் முன் பாய்ந்துசத்யன் தற்கொலை செய்து கொண்டார்.
சத்யனுக்கு மனைவியும், 10 வயது மகளும் உள்ளனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சத்யன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், இந்திய கால்பந்துஅணியில் ஆடிய காலத்தில் எனக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும்இருந்தது.
ஆனால் எனது குடிப்பழக்கம் மற்றும் சூதாட்டத்தால் மரியாதை இழந்து விட்டேன்.இந்த நிலையில் எனக்கு வாழ விருப்பம் இல்லை.
கடைசியாக மனைவியை சந்திக்க நினைத்தேன். ஆனால் அவரை சந்தித்தால் எனதுமுடிவை மாற்றிக் கொள்ள நேரிட்டு விடும் என்பதால் சந்திக்க முடியவில்லை.
இதற்காக என்னை அவர் மன்னிக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார். சத்யனின்தற்கொலை இந்திய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications