சட்டசபை இருக்கை மாற்றம்: ஜெ.வுக்கு சபாநாயகர் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபையில் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இருக்கைகளைமாற்றுவது சபாநாயகரின் அதிகாரத்திற்குட்பட்டது. இதை கேள்வி கேட்க யாருக்கும்அதிகாரம் இல்லை என்று சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின்இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிக்கைவெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித்தலைவருமான ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.வாஸ்துவின் பிடியில் கருணாநிதி சிக்கியுள்ளதையே இது காட்டுவதாகவும் அவர்கூறியிருந்தார். ஜெயலலிதாவின் அறிக்கைக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுமானத்தின்அடிப்படையில் தவறான தகவல்களை தந்துள்ளார் ஜெயலலிதா. இது கடுமையாககண்டிக்கத்தக்கது. இருக்கைகளை மாற்றி அமைப்பது அவைத் தலைவரின் தனிஉரிமை.
சபாநாயகரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதைகேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications