எஸ்.எஸ்.சந்திரன் மீது புது வழக்கு!
மதுரை:
நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது மதுரை போலீஸார் புதிய வழக்கு ஒன்றைப் பதிவுசெய்துள்ளனர்.
எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகன் தனசேகரனின் மனைவி லதா மதுரை போலீஸில்கொடுத்த புகாரில் எஸ்.எஸ்.சந்திரன், தனசேகரன், சந்திரனின் குடும்பத்தினர் தன்னிடம்வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.இந்தப் புகாரின் பேரில் தனசேகரனை போலீஸார் கைது செய்தனர். எஸ்.எஸ்.சந்திரன்,அவரது மகள் கண்மணி ஆகியோர் தலைமறைவானார்கள். இருவரும் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை இருவருக்கும் நிபந்தனைமுன்ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தஎஸ்.எஸ்.சந்திரனும், அவரது மகள் கண்மணியும் இன்று மதுரை முதலாவது நீதித்துறைநடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.
இருவரும் தினசரி மதுரை தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லதாவின் தாய், தந்தையை மிரட்டி புகார் மனுவை வாபஸ் பெறுமாறுமிரட்டியதாக எஸ்.எஸ்.சந்திரன், மகள் கண்மணி உள்ளிட்டோர் மீது மதுரைபோலீஸார் புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications