பணிக் காலத்தை நீட்டிக்க கோரும் காவிரி நடுவர் மன்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காவிரி நடுவர் நீதிமன்றம் தனது பணிக் காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க கோரி, மத்திய அரசுக்கு கடிதம்அனுப்பியுள்ளது.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இந்த மன்றம் அமைக்கப்பட்டது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 201 டிஎம்சிநீரை வழங்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை கர்நாடகத்துக்கு இந்த மன்றம் பிறப்பித்தது. ஆனால், அந்தஉத்தரவை கர்நாடகம் மதித்ததே இல்லை.இந்த மன்றத்தின் பணிக்காலம் முடியவுள்ள நிலையில் அதன் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்றஎதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், மன்றத்தின் தலைவருக்கும் 2 உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டு அந்த நம்பிக்கை சிதைந்தது.
இந் நிலையில் தனது பணிக் காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க கோரி மத்திய நீர்வளத்துறைக்கு மன்றம்கடிதம் அனுப்பியுள்ளது.
இதனால் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெளியாக மேலும் காலதாமதம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications