மீனாட்சி கொலை வழக்கில் 50 சாட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குளித்தலை ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கில் 50 பேர் சாட்சிகளாக சேர்க்கப்படவுள்ளனர்.

ஆசிரியை மீனாட்சி. கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி காணாமல் போனார். இந்த வழக்கைசிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் சண்முகவேலு (36), குமார் (21) ஆகியோர் பிடிபட்டனர்.

மீனாட்சியை கொன்றதையும், அவரது உடலையும் மோட்டார் சைக்கிளையும் புதைத்ததையும், அவரைகற்பழித்ததையும், நகைகளை திருடியதையும் ஒப்புக் கொண்டனர்.

மீனாட்சியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளும், மீனாட்சியின் நகைகளும் பறிமுதல்செய்யப்பட்டன.

இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக 50 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கடந்த 2004ம் ஆண்டில் இருந்து மீனாட்சி கொலைக்கான காரணத்தையும், கொலையாளிகள் யார்என்பதையும் கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நேரத்தில், திடீரென்று 2 பேரை கொலையாளிகள்என சிபிசிஐடி போலீசார் கைது செய்திருப்பது பொது மக்களிடையும், மீனாட்சி உறவினர்களிடையேயும்பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

ஆனால் மீனாட்சி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தான் கைது செய்துள்ளோம். அதைநிரூபிப்பதற்கு எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என போலீசார் கூறுகின்றனர்.

மீனாட்சி அணிந்திருந்த சில நகைகளை கொலையாளிகளின் உறவினர் ஒருவர் அழிக்காமல் அப்படியேபயன்படுத்தி வந்தார். அதை மீட்டுள்ளோம். இதைத் தவிர மீனாட்சியை, சண்முகவேலும், குமாரும்தான் கொலைசெய்துள்ளனர் என்பதை நிரூபிக்க ஏராளமான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன என்கின்றர் போலீசார்.

மீனாட்சி கொலை வழக்கை அவசரப்பட்டு முடிக்கவில்லை என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+